விழுந்து நொறுங்கிய அகமதாபாத் விமானம் : முன்னாள் முதல்வரும் பலி..
புதிய இணைப்பு
இந்தியாவின் - அகமதாபாத் விமான நிலையம் அருகே நடந்த விமான விபத்தில், குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பிஸ்னஸ் கிளாஸ்-இல் பயணம் செய்த நிலையில் அவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
முதலாம் இணைப்பு
இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமான நிலையம் அருகே விமானம் ஒன்று 242 பயணிகளுடன் இன்று(12) விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியது.
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பயணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரின் போடிங் பாஸ்(Boarding Pass) சமூக ஊடகங்களில் பரவி வரும் நியையில் அதிகாரபூர்வமாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2016 முதல் 2021 வரை மாநில முதல்வராக பணியாற்றிய ரூபானி, பயணிகள் பட்டியலில் 12வது நபராக அவரது பெயர் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏர் இந்தியா விமான விபத்து: மகிழ்ச்சியையும் சோகத்தையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கும் ஒரு குடும்பம் News Lankasri
