மித்ர விபூஷன் விருதினை மோடிக்கு வழங்கி நெருக்கடியில் சிக்கிய அநுர
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மித்ர விபூஷன் விருதினை வழங்கி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நெருக்கடியில் சிக்கி விட்டதாக அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று(17.04.2025) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்த போது, அவருடன் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான ஒரு ஒப்பந்தம் பாதுகாப்பு ஒப்பந்தம் ஆகும்.
இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த ஒழுங்கான தகவல்கள் இன்னும் இரகசியமாகவே பேணப்படுகின்றன. கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் ஆதிக்கம் முழுமையாக இருக்கும் படி, இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
அமெரிக்காவின் வரி வரிவிதிப்பும், பிரித்தானியாவின் ஜி.எஸ்.பி நெருக்கடியும் இந்தியாவின் காலில் அநுர அரசை விழ வைத்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |