மட்டக்களப்பு இலஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பில் சந்திரகாந்தன் முறைப்பாடு
மட்டகளப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சந்திரகாந்தன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டு நேற்று(6) கொழும்பில் உள்ள இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவில் இடம்பெற்றுள்ளது.
சந்திரகாந்தனின் முறைப்பாடு
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், “மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் காரணமாக நேரடியாக சென்று இந்த முறைப்பாடு செய்து இருக்கின்றோம்.
மாவட்டத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் கிடப்பில் இருக்கின்ற ஆவணங்களையும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துக்களையும் புலனாய்வு செய்வதற்காக ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலட்ச ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு எதிராக விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
