மீண்டும் அதிகரிக்கப்படுகிறது மின் கட்டணம்
அடுத்த மாதம் முதல் மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 18 வீதமாக அதிகரிக்கப்படவுள்ள VAT வரி எரிபொருள் விலை நிர்ணயத்தை நேரடியாகப் பாதிப்பதால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் என சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்சார சபை மறுசீரமைப்பை எதிர்க்கும் தொழிற்சங்க தலைவர்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய வந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் மின்சார உற்பத்திக்கான டீசல் போதுமான அளவு ஒதுக்கப்படவில்லை என்று கூறிய அவர், இதுவரையிலும் நாட்டு மக்களுக்கு பலன்கள் வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குளிர்காலத்தில் மூச்சுவிடுவதற்கு சிரமப்படுறீங்களா? இந்த பாட்டி வைத்தியத்தை முயற்சித்து பாருங்க Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
Bigg Boss: பேபின்னு சொன்ன வாயை உடைச்சிடுவேன்... இருக்கையை எட்டி உதைத்த கம்ருதின்! பாருவின் காதல் முறிவு Manithan