இரண்டாக பிளவுபடபோகும் ஆப்பிரிக்கா! உருவாகும் புதிய பெருங்கடல்
தென்னாப்பிரிக்காவில் பூமிக்கு அடியில் ஒரு முக்கியமான மாற்றம் நடைபெறுவதாகவும், இது இதயத்தின் துடிப்பைப் போல இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதனால் பூமியில் புதிதாக ஒரு கடல் உருவாகும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஆப்பிரிக்க கண்டம் இரண்டாகப் பிளவுபடுவது புவியியல் அறிவியலில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.
இது கிழக்கு ஆப்பிரிக்கப் பிளவு பள்ளத்தாக்கு (East African Rift) எனப்படும் புவித்தட்டு இயக்கங்களால் நிகழ்கிறது. இந்தப் பிளவு மூலம் ஒரு புதிய பெருங்கடல் உருவாக வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
டெக்டோனிக் தட்டுகளின் இயக்கம்
ஆப்பிரிக்க கண்டத்தை உள்ளடக்கிய நுபியன் (Nubian) மற்றும் சோமாலி (Somali) புவித்தட்டுகள் ஒவ்வொரு ஆண்டும் 0.5 முதல் 0.7 செ.மீ வேகத்தில் விலகி வருகின்றன. இந்த இயக்கம் கிழக்கு ஆப்பிரிக்காவில் பிளவை ஏற்படுத்துகிறது.
2005ஆம் ஆண்டு எத்தியோப்பியாவின் அஃபார் பகுதியில் 56 கி.மீ நீளமுள்ள பிளவு தோன்றியது. இது எரிமலை வெடிப்பு மற்றும் நிலநடுக்கங்களால் தூண்டப்பட்டது.
செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் இருந்து உப்பு நீர் இந்தப் பிளவுப் பகுதியை நோக்கி நகர்ந்து, இது எதிர்காலத்தில் ஒரு புதிய பெருங்கடலை உருவாக்கும் என கூறப்படுகிறது.
இது ஆப்பிரிக்காவை இரண்டு தனித்தனி கண்டங்களாகப் பிரிக்கும் என கூறப்படுகிறது.
எப்போது நிகழும்
முன்னர் இந்த செயல்முறை 5 முதல் 10 மில்லியன் ஆண்டுகள் எடுக்கும் என மதிப்பிடப்பட்டது. ஆனால், சமீபத்திய ஆய்வுகள் இது எதிர்பார்த்ததை விட வேகமாக நடைபெறலாம் எனக் கூறுகின்றன.
இருப்பினும், இது இன்னும் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் ஆகலாம் என கூறப்படுகிறது. எத்தியோப்பியா, உகாண்டா, ருவாண்டா, ஜாம்பியா போன்ற நிலத்தால் சூழப்பட்ட நாடுகள் கடற்கரையைப் பெறலாம் என கூறப்பட்டுள்ளன.
இந்தப் பிளவு காலநிலை மாற்றத்தால் வாழ்விடங்களை பாதிக்கலாம், இதனால் சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் விலங்கினங்கள் அழியும் அபாயம் உள்ளது.
மேலும் 2018இல் கென்யாவில் ஒரு பெரிய விரிசல் தோன்றியது, இது இந்தப் பிளவு செயல்முறையை உலகளவில் கவனிக்க வைத்தது.
இந்தப் பிளவு முடிவடையும் போது, கிழக்கு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதி தனி கண்டமாக மாறி, இந்தியப் பெருங்கடலில் மிதக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.