ஆப்கானிஸ்தான் மசூதிக்குள் குண்டுவெடிப்பு: மதகுரு உட்பட 18 பேர் பலி-செய்திகளின் தொகுப்பு
ஆப்கனிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் உள்ள ஒரு மசூதிக்குள் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
மசூதிக்குள் மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது நேற்று இத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மசூதிக்குள் நிகழ்ந்த குண்டுவெடிப்பில், குஜர்கா மசூதியின் இமாம் ஆக உள்ள முக்கிய இஸ்லாமிய மதகுரு மவுலாவி முஜீப் ரஹ்மான் அன்சாரி என்பவர் பரிதாபமாக கொல்லப்பட்டார்.
தற்கொலைப்படை தாக்குதல் காரணமாக இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மசூதிக்குள் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த விவரம் இன்னும் வெளிவரவில்லை.
இந்த குண்டுவெடிப்பில் 18க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும், காயம் அடைந்ததாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
தலிபான் உயர்மட்ட மந்திரிகள் மீது குறிவைத்து இந்த பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
