குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஆலோசனை

Ranil Wickremesinghe Supreme Court of Sri Lanka Bar Association of Sri Lanka Death Penalty Crime
By Aanadhi Jun 21, 2023 04:33 AM GMT
Report

நீதிமன்றினால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது தொடர்பிலான வழிகாட்டுதல்களை உருவாக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான வழிகாட்டுதல் கோவை ஒன்றை வெளியிடுவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜயமஹவை விடுதலை செய்வதற்கான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தை இரத்து செய்யக் கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பெண்கள் ஊடக அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு, நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஆலோசனை | Advice On Pardoning The Offender

விவாதம் செய்ய முடியாது

எஸ்.துரைராஜா, யசந்த கோதாகொட மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் குறித்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அதன் போது ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மேற்கண்டவாறான வழிகாட்டல் கோவை ஒன்றின் உருவாக்கம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

அங்கு ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் தொடர்பில் விவாதம் செய்ய முடியாது என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், தற்போதுள்ள சட்ட விதிகளுக்கு அமைவாக அதிகாரம் பயன்படுத்தப்பட வேண்டுமென குறிப்பிட்ட சாலிய பீரிஸ், ஜனாதிபதிகள் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் ஏற்படக்கூடிய ஏற்றத்தாழ்வுகளைத் தவிர்ப்பதற்கு தொடர்ச்சியான வழிகாட்டுதல்களை வெளியிடுமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஆலோசனை | Advice On Pardoning The Offender

நீதியமைச்சிடம் கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் முன்னிலையான ஜனாதிபதியின் சட்டத்தரணி பைசர் முஸ்தபா, இதன்போது தனது வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது தொடர்பில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோப்பு தொடர்பில் வினவிய போது, ​​அது ஜனாதிபதி அலுவலகத்தில் இல்லை என அலுவலகம் தனது கட்சிக்காரருக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கோப்பு தொடர்பான தகவல்களை வழங்குமாறு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் நீதியமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் மேலதிக மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், அன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் ஜனாதிபதியின் சட்டத்தரணி பைசர் முஸ்தபா மேலதிக விடயங்களை முன்வைக்கவுள்ளார்.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஆலோசனை | Advice On Pardoning The Offender

நீதிமன்றில் கருத்து

இதேவேளை, குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு தாம் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை என தென் மாகாண கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் ரமோன் விக்ரமசிங்க மற்றும் பலாங்கொட புத்தகோச தேரர் ஆகியோர் தமது சட்டத்தரணிகள் ஊடாக உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.

ஜூட் ஷ்ரமந்த ஜயமஹ என்ற குற்றவாளியை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு மேற்குறித்த மதத்தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்திருந்தமை தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஷமில் பெரேரா கடந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றில் கருத்து வௌியிட்டிருந்தார்.

ஆனால் அவ்வாறான கோரிக்கையை அப்போதைய ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவில்லை என ஆயர் ரமோன் விக்கிரமசிங்க மற்றும் பலாங்கொடை புத்தகோச தேரர் ஆகியோர் தமது சட்டத்தரணி ஊடாக உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW    


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US