குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஆலோசனை

Ranil Wickremesinghe Supreme Court of Sri Lanka Bar Association of Sri Lanka Death Penalty Crime
By Aanadhi Jun 21, 2023 04:33 AM GMT
Report

நீதிமன்றினால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது தொடர்பிலான வழிகாட்டுதல்களை உருவாக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான வழிகாட்டுதல் கோவை ஒன்றை வெளியிடுவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜயமஹவை விடுதலை செய்வதற்கான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தை இரத்து செய்யக் கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பெண்கள் ஊடக அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு, நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஆலோசனை | Advice On Pardoning The Offender

விவாதம் செய்ய முடியாது

எஸ்.துரைராஜா, யசந்த கோதாகொட மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் குறித்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அதன் போது ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மேற்கண்டவாறான வழிகாட்டல் கோவை ஒன்றின் உருவாக்கம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

அங்கு ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் தொடர்பில் விவாதம் செய்ய முடியாது என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், தற்போதுள்ள சட்ட விதிகளுக்கு அமைவாக அதிகாரம் பயன்படுத்தப்பட வேண்டுமென குறிப்பிட்ட சாலிய பீரிஸ், ஜனாதிபதிகள் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் ஏற்படக்கூடிய ஏற்றத்தாழ்வுகளைத் தவிர்ப்பதற்கு தொடர்ச்சியான வழிகாட்டுதல்களை வெளியிடுமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஆலோசனை | Advice On Pardoning The Offender

நீதியமைச்சிடம் கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் முன்னிலையான ஜனாதிபதியின் சட்டத்தரணி பைசர் முஸ்தபா, இதன்போது தனது வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது தொடர்பில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோப்பு தொடர்பில் வினவிய போது, ​​அது ஜனாதிபதி அலுவலகத்தில் இல்லை என அலுவலகம் தனது கட்சிக்காரருக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கோப்பு தொடர்பான தகவல்களை வழங்குமாறு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் நீதியமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் மேலதிக மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், அன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் ஜனாதிபதியின் சட்டத்தரணி பைசர் முஸ்தபா மேலதிக விடயங்களை முன்வைக்கவுள்ளார்.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஆலோசனை | Advice On Pardoning The Offender

நீதிமன்றில் கருத்து

இதேவேளை, குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு தாம் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை என தென் மாகாண கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் ரமோன் விக்ரமசிங்க மற்றும் பலாங்கொட புத்தகோச தேரர் ஆகியோர் தமது சட்டத்தரணிகள் ஊடாக உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.

ஜூட் ஷ்ரமந்த ஜயமஹ என்ற குற்றவாளியை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு மேற்குறித்த மதத்தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்திருந்தமை தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஷமில் பெரேரா கடந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றில் கருத்து வௌியிட்டிருந்தார்.

ஆனால் அவ்வாறான கோரிக்கையை அப்போதைய ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவில்லை என ஆயர் ரமோன் விக்கிரமசிங்க மற்றும் பலாங்கொடை புத்தகோச தேரர் ஆகியோர் தமது சட்டத்தரணி ஊடாக உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW    


1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US