கிண்ணியா கண்டல்காடு பகுதியில் பாடசாலை அமைக்க நடவடிக்கை
கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட உப்பாறு கிராம உத்தியோகத்தர் பிரிவில் கண்டல்காடு பகுதி மக்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைக்கான பாடசாலை கட்டிடம் அமைப்பது தொடர்பிலும் அதற்கான காணியினை பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் காணியினை அடையாளப்படுத்தும் நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று (01) கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி அவர்களின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கிண்ணியா பிரதேசத்திற்கான வன பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், கிண்ணியா சூராசபை உறுப்பினர்கள், கிண்ணியா வலையக்கல்வி பணிமனை உத்தியோகத்தர்கள், கிண்ணியா பிரதேச செயலகத்தில் காணிக்கிளை உத்தியோகத்தர்கள், உப்பாறு கிராம உத்தியோகத்தர் மற்றும் உப்பாறு கிராம பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |