எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக சைக்கிள் ஓட்டுதலை பிரபலப்படுத்த நடவடிக்கை - அமைச்சர் வெளியிட்ட தகவல்
நாட்டில் எரிபொருள் நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வாக சைக்கிள் ஓட்டுதலை பிரபலப்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, நகருக்கு வெளியே உள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைமாணவர்களுக்கு சைக்கிள் ஓட்டுவதை பிரபலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ரயிலில் கொழும்புக்கு பயணிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து அருகிலுள்ள ரயில் நிலையத்திற்கு சைக்கிள் சென்று ரயில் நிலையத்தில் பாதுகாப்பாக சைக்கிளை நிறுத்தவும் போக்குவரத்து அமைச்சகம் உத்தேசித்துள்ளது.
சைக்கிள் ஓட்டுபவர்களின் பாதுகாப்பிற்காக புதிய பாதைகளை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கை காவல்துறை, இலங்கை பொறியியலாளர்கள் நிறுவனம் மற்றும் சைக்கிள் ஓட்டுதலில் ஈடுபட்டுள்ள ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து செயற்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பூங்கா மற்றும் சவாரி நிலையங்கள் அமைக்கப்படும்
கொழும்புக்கு செல்லும் பிரதான ஏழு பிரதான வீதிகளிலும் பூங்கா மற்றும் சவாரி நிலையங்கள் அமைக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்புக்கான தினசரி போக்குவரத்தை குறைக்க சகல புகையிரத நிலையங்களிலும் பூங்கா மற்றும் சவாரி நிலையங்கள் அமைக்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நெடுஞ்சாலைகள் அமைச்சின் மக நெகும மெதுர கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர். டபிள்யூ. ஆர்.பிரேமசிறி, மேலதிக செயலாளர். சி. திலகரத்ன மற்றும் இலங்கை காவல்துறையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam