நாடாளுமன்றை உடன் கலைத்து தேர்தலுக்கு செல்ல நடவடிக்கை..! ஜனாதிபதியின் இரகசிய நகர்வு குறித்து தகவல்
ஆட்சியை கொண்டு செல்வதில் நெருக்கடி நிலைமை ஏற்படுமாக இருந்தால் நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து நாடாளுமன்ற தேர்தலுக்கு செல்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்படுகிறது.
அரசாங்கத்தின் பிரதான கட்சியான பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாகவும், இதனால் ஜனாதிபதிக்கு தீர்மானங்களை எடுப்பதற்கு இடையூறுகள் ஏற்படுமாக இருந்தால் நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி ஆராய்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவேளை நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலின் மூலம் அமைக்கப்படும் தமது அரசாங்கம் தற்போதைய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
