அனுராதபுர - கலாவெவ தொடருந்து நிலைய ஆசன முன்பதிவு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
அனுராதபுர - கலாவெவ தொடருந்து நிலையத்தில் ஆசன முன் பதிவு சேவையினை அறிமுகப்படுத்துவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்யுமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனயினால் தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கலாவெவ தொடருந்து நிலையத்தில் ஆசன முன் பதிவு செய்வதற்கான சேவை அறிமுகம் செய்யப்படாமையினால் பயணிகள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானிடம் பிரதேசவாசிகள் கோரிக்கையயொன்றினை முன்வைத்துள்ளனர்.
உடனடி நடவடிக்கை
இதனையடுத்து உடனடி நடவடிக்கை மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனயிடம் இப்பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
போக்குவரத்து அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினரின் வேண்டுகோளை ஏற்று ஆசன முன்பதிவு சேவையினை கலாவெவ தொடருந்து நிலையத்தில் அறிமுகப்படுத்துவது தொடர்பில் நேற்று (12.05.2023) தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
பொது முகாமையாளர் உறுதி
குறித்த வேண்டுகோள் கடிதத்தின் பிரதியினை நாடாளுமன்ற உறுப்பினர் தொடருந்து திணைக்கள பொது முகாமையாளருக்கு நேற்று (12.05.2023) வழங்கி வைத்துள்ளார்.
மேலும், ஆசன முன்பதிவு சேவையினை ஆரம்பிப்பதற்கான சகல நடைமுறைகளையும் வெகுவிரைவில் நிறைவு செய்து தருவதாக தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளர் உறுதியளிதுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW |

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 10 மணி நேரம் முன்

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri
