பங்கீட்டு அட்டையின் அடிப்படையில் எரிபொருள் வழங்க நடவடிக்கை: யாழ். அரசாங்க அதிபர் தகவல்
யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பங்கீட்டு அட்டையின் அடிப்படையில் ஜூலை மாதம் தொடக்கம் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
பொதுமக்கள் தங்கள் பிரதேச செயலர் பிரிவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக எரிபொருளைக் கொள்வனவு செய்துகொள்ள முடியும்.
பங்கீட்டு அட்டை
கிராம உத்தியோகஸ்தர்கள் ஊடாக பொதுமக்களுக்கும், திணைக்கள தலைவர்கள் மற்றும் பிரதேச செயலர் ஊடாக அரச ஊழியர்களுக்கும் பங்கீட்டு அட்டையின் அடிப்படையில் எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியும்.
பொதுமக்கள் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் எரிபொருள் பெற்றுக் கொள்ளமுடியும்.
ஜீவனோபாய தொழிலாளர்கள், அத்தியாவசிய அரச ஊழியர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். மேலும் சகலருக்கும் தேவையின் அடிப்படையில் அளவு கணக்கிடப்பட்டே எரிபொருள் விநியோகம் நடைபெறும். எனவே பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்'' என்றார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

முதலாம் ஆண்டு திருமண நாள், தனது மகன்களின் முகத்தை காட்டிய விக்னேஷ் சிவன், நயன்தாரா- கியூட் போட்டோஸ் Cineulagam
