திருகோணமலையில் மோட்டார்சைக்கிளுடன் மோதிய முச்சக்கரவண்டி: ஒருவர் வைத்தியசாலையில்
திருகோணமலை மாவட்டத்தின் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார்சைக்கிள் ஒன்றும், முச்சக்கரவண்டியொன்றும் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளன.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் மோட்டார்சைக்கிளில் பயணித்த 31 வயது நபரொருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாகனமொன்றினை முந்திச் செல்ல முற்பட்ட போது வேகமாக பயணித்த இரு வாகனங்கள் மோதிய நிலையில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |