யாழ்.உரும்பிராயில் விபத்து: ஒருவர் படுகாயம்
யாழ்ப்பாணம்- உரும்பிராய்ப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
குறித்த விபத்தானது இன்றையதினம்(6) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், பலாலி வீதியால் கார் ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது.
விசாரணை
இதன்போது காருக்கு முன்னால் திடீரென ஒரு துவிச்சக்கர வண்டி குறுக்கே வந்தபோது காரின் சாரதி வாகனத்தை சடுதியாக நிறுத்தியுள்ளார்.
இதனையடுத்து, காருக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் காரின் மீது மோதி விபத்து சம்பவித்தது.
இதன்போது மோட்டார் சைக்கிள் சாரதி காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விபத்து சம்பவம் குறித்த விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



