சாதாரண தர பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிக்கு நேர்ந்த கதி!
சாதாரண தர பொதுப் பரீட்சை நிலையத்தின் பொறுப்பதிகாரியாக இருந்த அதிபர் ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.
வான் ஒன்று மோதியதில் ஏற்பட்ட விபத்து காரணமாக அவர் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பன்னேகமுவ, திஸ்ஸமஹாராம பகுதியில் அமைந்துள்ள றோயல் கல்லூரியின் பரீட்சை நிலையத்தின் பொறுப்பதிகாரியாக இவர் கடமையாற்றிவந்துள்ளார்.
மேலதிக விசாரணை
உயிரிழந்தவர் வீரியகம சூரியவெவ கனிது கல்லூரியின் அதிபர் எனவும் அவர் சூரியவெவ விகாரகல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும் திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த அதிபரின் சடலம் திஸ்ஸமஹாராம தெபரவெவ வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் சந்தேக நபரான வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், திஸ்ஸமஹாராம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
