சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மோதி விபத்து : ஒருவர் படுகாயம் (Photos)
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு 35 வீதியில் பரந்தன் சந்தியை அண்மித்த
பகுதியில் இவ் விபத்து சம்பவம் இன்று (4) இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் இளைஞரொருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த டிப்பர் வாகனம் கிளிநொச்சி பொலிஸாரின் உதவியுடன் குறித்த டிப்பர் வாகனம் தப்பிச்செல்ல இடம் அளிக்கப்பட்டுள்ளது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவ இடத்தில் கிளிநொச்சி பொலிஸார் கடமையில் இருந்த போதும் குறித்த டிப்பர் வாகனம் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri
வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன் News Lankasri