வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்
வவுனியா, சாளம்பைக்குளம் பல்கலைக் கழக விடுதிக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (02.09) இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மேலதிக விசாரணை
வவுனிய, சாளம்பைக்குளம் பல்கலைக்கழக விடுதிக்கு முன்பாக வீதியோரத்தில் அமர்ந்து சோளம் விற்பனை செய்து கொண்டிருந்த நபரிடம், பிறிதொருவர் சோளம் வாங்கிக் கொண்டிருந்த போது, மன்னாரில் இருந்து வந்த டிப்பர் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இருவரையும் அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்டு வவுனியா பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதும், சோளம் வாங்கிய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் சாளம்பைக்குளம் பகுதியை சேர்ந்த ரகீம் மஜீத் ( வயது 31) என்பவரே பலியாகியுள்ளார். இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைப் பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமும் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடும்..! 11 மணி நேரம் முன்
19 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் Cineulagam
ஜெயிலர் 2 ரிலீஸ் தள்ளிப்போகிறதா? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அறிவிப்பு.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி Cineulagam