முரசுமோட்டை கமக்காரர் அமைப்பின் நிதி நடவடிக்கையில் முறைகேடு
கிளிநொச்சி முரசுமோட்டை கமக்காரர் அமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு கணக்கு அறிக்கைக்கும் குறித்த அமைப்பினால் ஏற்கனவே தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாகப் பெறப்பட்ட தகவல்களுக்கும் இடையில் பெருந்தொகை நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ளடங்குகின்ற முரசுமோட்டை கமக்கார அமைப்பின் நிதி நடவடிக்கைகள் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.
கடந்த மூன்றாம் திகதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பல்வேறுபட்ட சந்தேகங்களும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
குறித்த தினத்தில் 2019 முதல் 2021 சிறுபோகம் வரைக்குமான ஐந்து போகங்களுக்கான வரவு செலவு கணக்கு அறிக்கைகள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படாத நிலையிலேயே சமர்ப்பிக்கப்பட்டன.
இதில் கடந்த 2019 ஆம் 2020ம் ஆண்டில் மட்டும் வரவாக ஐந்து இலட்சத்து 86ஆயிரத்து 310 ரூபா வரவாகவும் ஐந்து இலட்சத்து 64ஆயிரத்து 930ரூபா செலவிடப்பட்டதாகவும் காட்டப்பட்டுள்ளது.
ஆனால் 2019ம் ஆண்டு சிறுபோகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய 10இலட்சத்து 38ஆயிரத்து360 ரூபா வரவு செலவாகக் காட்டப்பட்டுள்ளது.
நேரடியாகக் கடந்த 03ம் திகதி பொதுச்சபையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நிதி முறைகேடு தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளது.


ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri