முல்லைத்தீவு கெருடமடுவில் இடம்பெற்ற ஆடி அமாவாசைத் தீர்த்தம்
ஆடி அமாவாசைத் தீர்த்தம் வெகுசிறப்பாக முல்லைத்தீவு கெருடமடு பிள்ளையார் கோவிலில் இன்று சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வர் ஆலயத்திலிருந்து சிவபெருமான் வீதி வழியாக கெருடமடுவைச் சென்றதும், ஆலய பிரதமக்குருக்கள், கெருடமடு பூசகர் ஆகியோரால் விசேட பூஜைகள் நடத்தப்பட்டது.
தந்தையை இழந்த பிள்ளைகள் தங்கள் தந்தையின் ஆத்மா சாந்தியடைவதற்கு விரதமிருந்து கிரியைகள் செய்யப்பட்டு நீரில் கரைத்து தீர்த்தமாடுவது இந்துக்களின் ஒரு முக்கியமான விரதமாகும்.
நேர்த்திக் கிரியைகள்
அந்தவகையில் 600 ஆண்டுகளுக்கு பழமைவாய்ந்ததும், கெருடன் என்ற பறவையினால் சிவபெருமானின் அருளால் கீரிமலைக்குச் செல்லும் முதியவர்களால் நடக்கமுடியாத நிலை ஏற்பட்டபோது இவ்விடத்தில் இப்பறவை வந்து தன்னுடைய சொண்டால் கீறி நீரைஎடுத்து அடியார்களினை தீர்த்தமாட வைத்ததனால் கெருடன் மடு என்ற காரணப் பெயரும் இவ் இடத்திற்கு உண்டு.
அந்தவகையில் பல்வேறுபட்ட மாவட்டங்களிலிருந்து தங்கள் நேர்த்திக் கிரியைகளை செய்வதற்கு பெருந்திரளான மக்கள் வருகை தந்துதீர்த்தமாடுவது வழக்கம்.
இந்தஆண்டும் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு கிரியைகள் செய்து தீர்த்தமாடியமை குறிப்பிடத்தக்கது.