திருகோணமலையில் பெண் ஒருவர் கைது
திருகோணமலை(Trincomalee) - ஈச்சலம்பற்று பிரதேசத்தில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் ஒருவரை 12 கிராம் 11 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் ஈச்சலம்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை இன்று(14.07.2024) இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் சுற்றிவளைப்பு
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று(14) காலை ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள வெருகல் முகத்துவாரம் பிரதேசத்தில் குறித்த கஞ்சா வியாபாரியான பெண்ணின் வீட்டை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சுற்றிவளைத்து முற்றுகையிடுள்ளனர்.
இதன்போது, வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்து பெண்ணை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 12 கிராம் 11 மில்லிக்கிராம் கஞ்சாவை மீட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட 42 வயதுடைய சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சிறகடிக்க ஆசை சீரியலில் டம்மி ஆகிவிட்டதா மீனா ரோல்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.. புரோமோ வீடியோ Cineulagam
முறைத்துக்கொண்டு நின்ற பிரஜன், Chair தூக்கிப்போட்டு விஜய் சேதுபதி அதிரடி- பிக்பாஸ் 9 புரொமோ Cineulagam
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri
ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய சுந்தர் சி.. திடீரென குஷ்பூ - கமல்ஹாசன் நேரில் சந்திப்பு! Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri