அரச வேலை பெறுவதற்கு யாழ். சிறீதர் தியேட்டர் ஒரு கடிதம் போதும்! மாணவன் ஒருவனின் பரபரப்பு வீடியோ
யாழ்ப்பாணத்திலுள்ள சிறீதர் தியட்டர் அடிக்குச் சென்று கடிதம் ஒன்றைப் பெற்றுக்கொண்டால், வட மாகாணத்தில் அரசாங்க பணியை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதுதான் இன்றைய நிலைமை எனவும் மாணவன் ஒருவர் அரசாங்கத்தை பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, 5 பேர் பணி புரியவேண்டிய இடத்தில் 50 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இது அரசாங்கத்தில் நடைமுறையாக உள்ளது இதை நிறுத்த வேண்டும்.
நாட்டின் வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு வேலை வழங்க வேண்டுமென்றால், தனியார்மயமாக்கல் அவசியம். அதனை ஐ.எம்.எப். எடுத்துரைத்துள்ளது.
அத்துடன், 1959ஆம் ஆண்டு அரச மறை 6 சதவீதத்திலும், தனியார் 4 சதவீதத்திலும், அதே போன்று 2009இல் அரசு மறை 10இலும், தனியார் 10 சதவீதத்திலும், 2022இல் அரசு மறை 10 சதவீதத்திலும் தனியார் 15 சதவீதத்திலும் அதிகரிக்கப்பட்டது.
இதிலிருந்து தனியார்மயமாக்கல் என்பது அவசியம் என்று நாம் விளங்கவேண்டும். அதைப் பரிந்துரை செய்தது ஐ.எம்.எப். அது நாட்டினுடைய பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துகின்றது என்றே கூறவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |