அவுஸ்திரேலியாவில் இலங்கை பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் வசிக்கும் இலங்கை பெண்ணொருவர் தனது வீட்டில் வைத்து கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
44 வயதான மூன்று பிள்ளைகளின் தாயான நெலோமி பெரேரா என்பரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கணவன் கைது
இக்கொலை தொடர்பில் அவரது கணவர் மெல்போர்ன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் நடந்தபோது, நெலோமி பெரேராவின் மகள் அயல் வீடுகளுக்குச் சென்று உதவி கோரியுள்ளமை சிசிடிவி கமெராக்களில் பதிவாகியுள்ளது.
பொலிஸார் விசாரணை
நெலோமி பெரேராவின் மகள் வந்து “எனது தாய் இறந்துவிட்டார், எனது தாயார் இறந்துவிட்டார்” என்று கூறியதாக அயலவர்கள் பொலிஸாரிடம் சாட்சியமளித்துள்ளனர்.
சந்தேகநபரான தினுஷ் குரேரா, நெலோமி பெரேராவின் வளர்ப்பு மகனையும் தாக்கியதாகத் தெரிவித்த மெல்பேர்ன் பொலிஸார், அவருக்கு பெரிதாக காயங்கள் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 17 மணி நேரம் முன்
9 நாட்களில் ரஜினியின் படையப்பா திரைப்படம் ரீ-ரிலீஸில் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam