கடற்படைக்கு காணி வழங்கிய விவகாரம்! அரசியல்கட்சி ஆதரவாளர்களிடம் சரமாரி கேள்வியெழுப்பிய இளைஞன்
நெடுந்தீவில் கடற்படைக்கு காணி வழங்கியமை தொடர்பில் கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையை தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் குழப்பியமையினால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
நேற்று(19.06.2026) அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் போதே இந்த பரபரப்பான நிலை உருவாகியுள்ளது.
சரமாரி கேள்வி எழுப்பிய இளைஞன்
யுத்தம் நிறைவடைந்ததற்கு பின்னர் ஏன் கடற்படைக்கு காணி வழங்கினார்கள்? காணி வழங்கும் கலந்துரையாடலுக்கு மக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டார்களா என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் கடந்த கால அரசாங்கங்கள் வழங்கும் போது நீங்கள் ஏன் கேள்வி எழுப்பவில்லை என அவரது பேச்சை குழப்பிய நிலையில் அங்கு அமைதி இன்மை ஏற்பட்டுள்ளது.
இதன்போது மயிலிட்டி காணி விடுவிப்புக்காக போராடும் இளைஞன் குறித்த அரசியல் கட்சியின் ஆதரவாளர்களிடம் சரமாரியான கேள்வியை எழுப்பியுள்ளார்.
இதன் போது, ஏன் எங்கள் காணிகளை விடாமல் வைத்திருக்கிறீர்கள் பதில் கூறுங்கள் என கேள்வி எழுப்பிய நிலையில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து பொலிஸார் கூட்டத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர் சந்திரசேகரன் யாழ். மாவட்டத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் பிராந்திய அலுவலகம் திறக்கப்படவுள்ள நிலையில் ஊழல்வாதிகள் தப்பிக்க முடியாது என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஊழல்வாதிகளுக்கு எதிரான விசாரணைகள்
நாட்டை சூறையாடிய கூட்டம் தொடர்ந்தும் தமது இருப்புக்களை தக்க வைத்துக்கொள்வதற்காக சதி விளையாட்டுகளில் இறங்கியுள்ளனர்.
நாம் தேர்தல் காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் ஊழல்வாதிகளுக்கு எதிராக விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு கைதுகளும் இடம்பெற்று வருகின்றன.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள்
இதனை பொறுக்க முடியாத அரசியல்வாதிகள் இனவாத மற்றும் மதவாதங்களை தூண்டி தான் தப்பித்துக்கொள்ளலாம் என பகல் கனவு காண்கிறார்கள்.
அரசாங்கம் என்ற வகையில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு எமது ஜனாதிபதி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக ஊழல் விசாரணைகளை துரிதப்படுத்துவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் பிராந்திய அலுவலகங்களை திறக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

யாழ்ப்பாணத்திலும் அதற்கான அலுவலகம் ஒன்றை திறப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் விரைவில் குறித்த அலுவலகம் திறக்கப்படும்.
ஆகவே நாட்டை பாதாளத்துக்குள் தள்ளிவிட்ட பழைய மற்றும் புதிய ஊழல்வாதிகளுக்கு எதிராக விரைவான விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் - 9A சித்திகளை பெற்று புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவர்கள் சாதனை