மட்டக்களப்பில் உள்ள பாடசாலைக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் நேரில் சென்று உதவி
மட்டக்களப்பு (Batticaloa) - புன்னக்குடா பகுதியில் உள்ள கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக்கான மலசலகூட தொகுதி மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்கா ஆகியன முன்னாள் கிரிக்கெட் வீரர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
குறித்த திறந்து வைக்கும் நிகழ்வு, இன்று (05.04.2024) காலை இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு - திம்புலாகல விகாராதிபதி சிறி தேவலங்காரவின் வேண்டுகோளுக்கமைய "ரொஷான் மஹாநாம" அமைப்பின் நிதிப்பங்களிப்பில் குறித்த மலசலகூட தொகுதி மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்கா ஆகியன கட்டப்பட்டுள்ளன.
நிகழ்வின் அதிதிகள்
அத்துடன், கிரான் தொப்பிக்கல 232 படையணி பிரிவின் ஒருங்கிணைப்புடன் இந்த செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் அதிதிகளாக திம்புலாகல விகாராதிபதி சிறி தேவலங்கார, "ரொஷான் மஹாநாம" அமைப்பின் தலைவர் ரொஷான் மஹாநாம, முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ரொமேஸ் கலுவித்தாரன மற்றும் சமிந்த வாஸ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
செய்தி - நிலவன்