இலங்கையை அச்சுறுத்தும் நோய் - மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
இலங்கையில் எட்டு மாவட்டங்களில் யானைக்கால் நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக யானைக்கால் நோயைக் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பு, களுத்துறை, மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை, கம்பஹா, புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் இந்நோய் தொடர்ந்து பரவி வருகின்றது.
கடந்த வருடத்தில் மாத்திரம் 400 புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டதாக யானைக்கால் நோயைக் கட்டுப்பாட்டு அமைப்பின் பணிப்பாளர் வைத்தியர் உதய ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
2030ஆம் ஆண்டளவில் இந்நோயை இலங்கையிலிருந்து ஒழிப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். நோயாளிகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக, இரத்தப் பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே, வீடுகளுக்கு வரும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மக்களின் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அனைத்து
சுகாதார அதிகாரிகளும் உத்தியோகபூர்வ சீருடை மற்றும் உத்தியோகபூர்வ
அடையாள அட்டைகளுடன் வீடுகளுக்கு வருகை தருவார்கள் என்றும் பணிப்பாளர்
குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் ராணுவ தளங்களை தாக்கிய இந்திய விமானப்படை: BrahMos பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பு News Lankasri

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam

இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரபலம்.. எங்கெல்லாம் சென்றுள்ளார் பாருங்க Cineulagam
