யாழில் இடம்பெற்ற பண்பாட்டுப் பெருவிழா
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் தென்மராட்சி பிரதேச செயலகமும், தென்மராட்சி கலாசாரப் பேரவையும், சாவகச்சேரி பிரதேச சபையும் இணைந்து நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது யாழ். வரணி கலாசார மண்டபத்தில் இன்று (21) நடைபெற்றது.
பல்வேறு கலை நிகழ்வுகள்
தென்மராட்சி பிரதேச செயலர் உஷா சுபலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், விருந்தினர்களாக வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர், பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் , யாழ்.மாவட்ட உள்ளூராட்சி பிரதி ஆணையாளர், சாவகச்சேரி பிரதேச சபைச் செயலாளர், மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது கலைஞர்களுக்கு "இளஞ்கலைஞர் விருது", "கலைச்சாகரம் விருது" வழங்கி கெளரவிக்கப்பட்டதோடு நிகழ்வை பல்வேறு கலை நிகழ்வுகள் அலங்கரித்தன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri