நாளை முதல் மின்வெட்டில் மாற்றம்
நாளை (27) முதல் ஜூலை 3ஆம் திகதி வரை 3 மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு(PUCSL) இதனை அறிவித்துள்ளது.
நேர விபரங்கள் அறிவிப்பு
A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய பிரிவுகளுக்கு நண்பகல் வேலையில் இரண்டு மணி நேரம் மற்றும் நாற்பது நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
குறித்த பிரிவுகளில் மீண்டும் மாலை வேலையில், ஒரு மணி நேரம் மற்றும் 20 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
கொழும்பு மாநகரப் பகுதியில் ஜூலை 2 மற்றும் 3 ஆம் திகதிகள் தவிர்ந்த ஏனைய நாட்களில் காலை 6 மணி முதல் 8 மணி வரை இரண்டு மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
இதேவேளை, M, N, O, X, Y, Z ஆகிய வலயங்களுக்கு எதிர்வரும் ஜுலை 2 மற்றும் 3ஆம் திகதிகளை தவிர்த்து காலை 5 மணி முதல் காலை 8 மணி வரை 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam