இந்தியாவில் பயங்கர விபத்து.. பற்றி எரிந்த லொறிகளுக்குள் சிக்கிய கார்!
இந்தியாவின் புனே நகரில் இரண்டு லொறிகள் மோதிக்கொண்டதில், கார் ஒன்று சிக்கிய நிலையில் ஏற்பட்ட விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
புனேவின் நவேல் பாலம் பகுதியில் இரு லொறிகளுக்குள் ஒரு காரும் சிக்கி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம் பதிவான காணொளிகளில், ஒரு லொறிகள் தீப்பிடித்து எரிவதைக் காணலாம், அதே நேரத்தில் புகைப்படங்கள் லொறிகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட சிதைந்த காரைக் காட்டுகின்றன.
மீட்பு நடவடிக்கை
தகவல் அறிந்ததும் தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு மற்றும் தீயணைப்பு நடவடிக்கைகளை தொடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
#Pune, Nr. Navale Bridge🚨⚠️
— Dave (Road Safety: City & Highways) (@motordave2) November 13, 2025
Horrific Incident🚨
News says lorry lost control, rammed multiple vehicles + car crushed b/w 2 lorries. 7 dead, 15 injured…
Lorries brake failed?@DriveSmart_IN @abhi_kulkarni85 @sss3amitg @InfraEye
pic.twitter.com/DvLYhX0S7g
இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபா 5 இலட்சம் இழப்பீடு வழங்குவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் - அரியலூர் நெடுஞ்சாலையில் திங்கட்கிழமை 100க்கும் மேற்பட்ட எல்பிஜி சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று கூர்மையான வளைவில் கவிழ்ந்து பெரும் தீ விபத்து மற்றும் தொடர் வெடிப்பு சம்பவங்களுக்கு சில நாட்களுக்குப் பிறகு இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri