கோவிட் தொற்றுக்கு உள்ளான 51 சிறுவர்கள் வைத்தியசாலையில்
கோவிட் வைரஸ் தொற்றிய 51 சிறுவர்கள் கொழும்பு றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த சிறுவர்களில் கோவிட் தொற்றிய நிலையில் 12 பேர் நேற்றைய தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
சிறுவர்களுக்கு கோவிட் வைரஸ் தொற்றும் நிலைமை அதிகரித்துள்ளதை காணமுடிவதாகவும் சிறுவர்கள் கோவிட் தடுப்பூசி வழங்கப்படாத தரப்பினர் என்பதால், தற்போது சிறுவர்களை பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும் எனவும் தீபால் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.