நாட்டில் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன
நாடு முழுவதிலும் சுமார் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோக சங்கத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்களின் துன்புறுத்தல்கள், தாக்குதல்கள், எரிபொருள் கொள்வனவு செய்ய பணமின்மை உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் இவ்வாறு 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
தாக்குதல் நடத்த வேண்டாம்

ஊரில் காணப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என எரிபொருள் விநியோக சங்கத்தின் உப தலைவர் கோரியுள்ளார்.
கிடைக்கும் எரிபொருட்களே விநியோகம் செய்யப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுடன் முரண்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 20 மணி நேரம் முன்
அடுத்த டிராமாவை போட்ட குணசேகரன், ஈஸ்வரி கேட்ட கேள்வி, ஷாக்கில் குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan