தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 50 முறைப்பாடுகள் பதிவு
ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் காலப்பகுதிவரை அமைதியான காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 50 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
குறித்த காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் பிரசாரங்களை மேற்கொண்ட குற்றச்சாட்டில் 30 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பசில் - நாமலின் பிள்ளைகள் நாட்டிலிருந்து வெளியேறிய செய்தி! மொட்டு கட்சி வெளியிட்டுள்ள பகிரங்க அறிவிப்பு
அரச சொத்து துஷ்பிரயோகம்
அத்துடன் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பெப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறியமை தொடர்பாக கிடைக்க பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை ஐயாயிரத்தினை அண்மித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |