பாதாள அறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட 5 பிரித்தானிய குழந்தைகள்! உலக செய்திகள் (video)
அவுஸ்திரியாவில் கைவிடப்பட்ட பாதாள அறை ஒன்றில் பிரித்தானிய குழந்தைகள் ஐவர் உள்ளிட்ட ஆறு பேர் வசிப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளவர்களுள் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஐவர் இருந்ததாகவும், 54 வயதுடைய நபர் ஒருவர் உடனிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நபர் சமூக சேவையாளர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், குறித்த பாதாள அறையும், அங்கு ஐந்து குழந்தைகள் இருப்பதும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு,