42 இலட்சம் ரூபா பெறுமதியில் சென்மேரிஸ் விளையாட்டரங்கு திறந்து வைப்பு
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக்கழக விளையாட்டு அரங்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்று (09.07.2024) சென்மேரிஸ் விளையாட்டு கழக தலைவர் பி .றஜித் தலைமையில் மாலை 3:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நிகழ்வின் ஆரம்பமாக மரியாம் பிள்ளை யாக்கோப் றஜீத்குமார் நினைவாக அவரது உறவினரால் 42 லட்சம் ரூபா பெறுமதியில் கட்டப்பட்ட சென்மேரிஸ் விளையாட்டரங்கு நாடாவெட்டி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
திறப்பு விழா
அதனைத் தொடர்ந்து, கட்டைக்காடு சென்மேரிஸ் அணியினருக்கும் வவுனியா இளம்தென்றல் அணியினருக்கும் இடையிலான சினேகபூர்வ உதைப்பந்தாட்ட போட்டி இடம்பெற்றுள்ளது.
ஆட்ட நேர முடிவில் 5-0 என்ற கோல் கணக்கில் கட்டைக்காடு சென்மேரிஸ் அணிவெற்றி பெற்றுள்ளது.
நிகழ்வின் இறுதியில் சென்மேரிஸ் விளையாட்டு அரங்கை நிர்மானித்து தந்த கட்டிடத் தொழிலாளர்களுக்கு அன்பளிப்பு பொருட்கள் வழங்கப்பட்டதுடன் வவுனியா இளந்தென்றல் அணியினருக்கும் நினைவு சின்னம் வழங்கப்பட்டுள்ளது.
இறுதியாக 42 இலட்சம் பெறுமதியில் சென்மேரிஸ் விளையாட்டு அரங்கை அமைத்துக் கொடுத்த செல்வக்குமாருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டதுடன் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கட்டைக்காடு பங்கு தந்தை அ. அமல்ராஜ் , சமுர்த்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி சங்க உத்தியோகத்தர், கட்டைக்காடு அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர், சென்மேரிஸ் நாடகமன்ற தலைவர்,சென்மேரிஸ் கடற்றொழிலாளர் சங்க தலைவர், விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர்.