மட்டக்களப்பில் 400 கிலோ பதப்படுத்தப்பட்ட இறைச்சியை கைப்பற்றிய சுகாதார அதிகாரிகள்
முறையாக குளிரூட்டப்படாமல் உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறி மனித பாவனைக்கு உதவாத 400 கிலோ பதப்படுத்தப்பட்ட இறைச்சியை (sausages)மட்டக்களப்பு நகரில் சுகாதார அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
அவற்றை எடுத்து வர பயன்படுத்திய வாகனம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி
பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு வேதாரணியம் வீதியில் வைத்து குறித்த வாகனத்தை மடக்கிப்பிடித்த சுகாதார பரிசோதகர்கள் அதிலிருந்து சுமார் 5 லட்சம் ரூபாய் பெறுமதியான நானூறு கிலோ பதப்படுத்தப்பட்ட இறைச்சியை கைப்பற்றியுள்ளனர்.

முறையாக குளிரூட்டப்படாமையினால் குறித்த இறைச்சி உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறி உள்ளதாகவும் மனித பாவனைக்கு உதவாதது எனவும் வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இரு நபர்களும் நேற்றுவரை(24) விளக்க மறியலில் வைக்கப்பட்டனர்.
நீதிமன்றில் முன்னிலையாக்கப்பட்டபோது தலா 10 ஆயிரம் வீதம் 20ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டதுடன் கைப்பற்றப்பட்ட பொருட்களை அழித்துவிடுமாறு மட்ட்ட்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.



இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 23 மணி நேரம் முன்
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri