யாழில் பிறந்து நான்கு நாட்களேயான குழந்தை மரணம்
யாழ்ப்பாணம் - ஆவரங்கால் பகுதியில் பிறந்து நான்கு நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
இந்த குழந்தை நேற்றையதினம் (19.12.2023) உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த குழந்தை
குறித்த குழந்தை கடந்த 14ஆம் திகதி யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் உள்ள
தனியார் வைத்தியசாலை ஒன்றில் பிறந்துள்ள நிலையில் தாயும் குழந்தையும் கடந்த
16ஆம் திகதி வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று(18) குழந்தையின் உடல் திடீரென குளிர்ந்ததுடன் உடல்நிலையில் மாற்றம் அவதானிக்கப்பட்டுள்ளது.
இதன்போது குழந்தை மீண்டும் திருநெல்வேலியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன் குழந்தையின் மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 6 மணி நேரம் முன்

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

பிரித்தானியாவில் அரங்கேறிய பயங்கரம்! வீட்டினுள் வைத்து சுட்டுக்கொலை..பெண் உட்பட இருவர் கைது News Lankasri

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

ஹாட் உடையில் வந்த ராஷ்மிகா.. பார்த்ததும் ஓடிப்போன ஏ.ஆர்.ரஹ்மான்! நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் Cineulagam

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri
