வவுனியாவில் காப்பகத்தில் உள்ளவர்கள் உட்பட 4 பேர் கோவிட் தொற்றால் மரணம்
வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாக இன்று 04 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கோவிட் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த , தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என 04 பேர் கோவிட் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.
நெளுக்குளம் , கோவிற்குளம் , பம்பைமடுப்பகுதியில் அமைந்துள்ள காப்பக இருவர் என அந்த பகுதியினை சேர்ந்தவர்களே இவ்வாறு கோவிட் தொற்றால் மரணித்தவர்களாவார்கள்.
இந்நிலையில், மரணித்த 4 பேரினதும் உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப்பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.