கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் (Photo)
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் கிட்டு உட்பட அவரோடு சேர்ந்து இதே நாளில் மரணம் அடைந்த மாவீரர்கள் 10 பேரினதும் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - வள்ளிபுனம் பகுதியில் நேற்று (16.01.2023) இந்த நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
உணர்வுபூர்வமான அஞ்சலி
இதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு மாவீரர்களின் திருவுருவ படத்துக்கு சுடர் ஏற்றி மலர் தூவி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.