யாழில் கைதான 29 பாண்டிச்சேரி கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கைக் கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 29 பாண்டிச்சேரி கடற்றொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கானது இன்றையதினம்(15) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
விளக்கமறியல்
கடந்த செப்டம்பர் 28ஆம் திகதி கைது நெடுந்தீவு கடலில் கைது செய்யப்பட்டு இந்த மாதம் 1ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இன்று மீளவும் விசாரணைக்கு வந்த 12 பாண்டிச்சேரி மீனவர்களின் வழக்கு விசாரணையும் , அதேபோல கடந்த 9ம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு இன்றையதினம் ஒத்திவைக்கப்பட்ட 17 பாண்டிச்சேரி மீனவர்களின் வழக்கு விசாரணையும் இன்றையதினம் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்டது.
இதன்போது, குறித்த வழக்கினை விசாரித்த ஊர்காவற்றுறை நீதவான் நளினி சுபாஸ்கரன் எதிர் வரும் 29ஆம் திகதிவரை கடற்றொழிலாளர்கள் 29 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இதேவேளை வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 36 படகுகளுடன் 279 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
