வவுனியா பழைய பேருந்து நிலைய பகுதியில் 25 பேருக்கு தொற்று
வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் பணியாற்றும் வியாபார நிலைய ஊழியர்கள் 25 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு நேற்றுமுன் தினம் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில்,அதன் முடிவுகள் இன்று கிடைக்கப்பெற்றது.
அதன் அடிப்படையில் அங்கு பணியாற்றும் 25 ஊழியர்களிற்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து குறித்த பகுதிக்கு இன்றைய தினம் சென்ற சுகாதார பிரிவினர் ஐந்திற்கும் மேற்பட்ட வியாபார நிலையங்களை தனிமைப்படுத்தியுள்ளதுடன், தொற்று உறுதியானவர்களை இனங்காணும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.