சுகாதாரத் துறையின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி
இந்தியக் கடன் வரியிலிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சுகாதாரத் துறையின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் பயன்படுத்தப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அமைச்சின் ஆலோசனைக் குழுவிடம் நேற்று (01.12.2022) அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை அங்கீகாரம்
இந்தியக் கடன் வரியிலிருந்து பெறப்பட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து மீதம் உள்ள 35 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்குவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் அந்நிய செலாவணி நெருக்கடியின் காரணமாக இலவச சுகாதார தேவையை பூர்த்தி செய்ய சவால்களை எதிர்கொண்டுள்ள சூழலில் தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து நேற்றைய கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நோயாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை
அரசாங்க வைத்தியசாலைகளை பராமரிக்கவும், தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கவும் தவறியமையினால், நோயாளிகள் தனியார் வைத்தியசாலைகளின் சேவையை பெற்றுக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சீனா வழங்கிய 28 மில்லியன் டொலர் மானியத்தைக் கொண்டு தேவையான 14
முக்கிய மருந்துகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது 21 மணி நேரம் முன்

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri

தங்கமயில் கர்ப்பம்.. சோகத்தில் இருந்த குடும்பத்தின் ரியாக்ஷன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ Cineulagam

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri
