கொழும்பை சேர்ந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட அலங்காரச் செடிகளுடன் இரண்டு பெண்களையும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பல்லுயிர், கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரியப் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவர்களை கைது செய்துள்ளனர்.
தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து வந்த இரண்டு இலங்கைப் பெண்கள் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.
பெண்கள் கைது
இரண்டு பெண் சந்தேக நபர்களும் சுமார் ஒரு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள அலங்காரச் செடிகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 45 மற்றும் 40 வயதுடையவர்கள், கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள். அவர்கள் இன்று அதிகாலை 12.35 மணிக்கு தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
அவர்கள் தங்கள் பொதிகளில் மறைத்து 436 அலங்காரச் செடிகளை நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டு வந்திருப்பது கண்டறியப்பட்டது.
இந்த தாவரங்களை கொண்டு வருவதற்கு அவர்கள் விவசாய துறையிடமிருந்து முறையான இறக்குமதி அனுமதிகளைப் பெறவில்லை.
மேலும், இலங்கையின் வனவிலங்கு மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் தாவர தனிமைப்படுத்தல் சட்டத்தின் விதிகளை மீறி இந்த தாவரங்களை அவர்கள் கொண்டு வந்துள்ள நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.