யாழ். புன்னாலைக்கட்டுவனில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு முதியவர்கள் படுகாயம்!
பலாலி வீதி- புன்னாலைக்கட்டுடன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு முதியவர்கள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தானது இன்றையதினம்(5) இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், இராணுவ வாகனம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலி நோக்கி சென்று கொண்டிருந்தது.

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்கு துணை போகும் யாழ். பல்கலைக்கழகம்! அன்னராசா குற்றச்சாட்டு
விசாரணை
இதன்போது இராணுவ வாகனத்தின் பின்னால் வந்த லொறி ஒன்று இராணுவ வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டவேளை பலாலி பக்கம் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது குறித்த லொறி மோதியது.
இந்த விபத்தின்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு முதியவர்களே படுகாயமடைந்துள்ளனர்.
மேலும், விபத்து சம்பவம் குறித்த விசாரணைகளை சுன்னாகம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 14 மணி நேரம் முன்

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri
