இரண்டு மாதங்களில் மட்டும் 19 துப்பாக்கி சூடு சம்பவங்கள்
இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து நேற்றையதினம்(05.03.2025) வரை 19 துப்பாக்கி சூடு சம்பவங்கள் நாட்டில் பதிவாகியுள்ளது.
கொழும்பில் இன்று(06) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
குறித்த 19 துப்பாக்கி சூடு சம்பவங்களில் 12 சம்பவங்கள் திட்டமிட்ட கும்பல்களால் மேற்கொள்ளப்பட்டவை என அவர் கூறியுள்ளார்.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்
எஞ்சிய 7 சம்பவங்களும் சில தனிப்பட்ட தகராறு காரணமாக நடந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 68 சந்தேக நபர்களைக் கைது செய்த பொலிஸார், துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட 6 T-56 துப்பாக்கிகளையும் கைப்பற்றியதாக புத்திக மனதுங்க கூறியுள்ளார்.
மேலும், 7 கைத்துப்பாக்கிகளும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட 8 மோட்டார் சைக்கிள்கள், 2 கார்கள், 1 வேன் மற்றும் 2 முச்சக்கர வண்டிகள் என்பன பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri