கிளிநொச்சியில் கைதுசெய்யப்பட்ட 18 வர்த்தகர்களுக்கு விதிக்கப்பட்ட உத்தரவு
கிளிநொச்சியில் கடந்த ஜனவரி மாதத்தில் கைது செய்யப்பட்ட 18 வர்த்தகர்களுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குற்றாச்சாட்டுகளுக்கு ஏற்ப 18 பேருக்கும் தொகை வேறுபட்டதுடன் மொத்தமாக ஒரு இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த ஜனவரி மாதம் நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபையினால் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

18 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு
இதன்போது அதி கூடிய விலைகளில் பொருட்களை விற்பனை செய்தமை, விற்பனைக்காக காட்சிப்படுத்தியமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, விலை மாற்றம் செய்து விற்பனை செய்தமை என பல்வேறு குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட 18 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri