வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர்! பாகிஸ்தானில் கோரம்
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாட் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் அடித்துச் செல்லப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களில் 4 பேர் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பக்துன்க்வா மாகாணத்திற்கு சுற்றுலா வந்த குழுவின் ஒரு பகுதியினர் (ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர்), ஸ்வாட் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
கனமழை வெள்ளம்
இதன்படி கனமழை காரணமாக வெள்ளம் அதிகரித்ததால் குறித்த அணைவரும் இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், அந்நாட்டு அதிகாரிகளின் கூற்றின்படி 18 பேரில் யாரும் பிழைக்க வாய்ப்பில்லை என அஞ்சப்படுகிறது.
காணொளி - https://x.com/1880News/status/1938557290589606192