சிறுமியின் மரணத்திற்கு யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் காரணமா..! செய்திகளின் தொகுப்பு
யாழ்ப்பாணத்தில் 16 வயதான சிறுமியை வேலைக்கு அமர்த்தி, சிறுமியின் மர்ம மரணத்திற்குக் காரணமான யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பிரித்தானியாவில் வாழும் இலங்கைத் தமிழர் ஒருவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
1956ஆம் ஆண்டின் 47ஆம் இலக்க, பெண்களையும் இளம் ஆட்களையும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்தல் சட்டத்தின் கீழ் 18 வயதுக்குட்பட்ட சிறுமியை இரவு வேலைக்கு அமர்த்தியது குற்றம்.
16- 18 வயதுக்குட்பட்டவரைத் தொழிலுக்கு அமர்த்தியது தொடர்பாகத் தொழில் திணைக்கள ஆணையாளருக்கு முறைப்படி அறிவிக்காதது குற்றம்.
தொழிலுக்கு அமர்த்திய நபருக்கு போதிய ஓய்வு அளிக்கத் தவறியது குற்றம் என கூறியுள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |