கொழும்பில் சிக்கிய நூற்றுக்கணக்கான இந்தியர்கள் - உடனடியாக நாட்டை விட்டு வெளியேற உத்தரவு
விசா முடிவடைந்த நிலையில் சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த 155 இந்தியர்கள் அடங்கிய குழு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியர்கள் அனைவரும் தனிப்பட்ட விசா விதிமீறல் காரணமாக கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டமையைத் தொடர்ந்து, இந்தியர்கள் தங்கள் தனிப்பட்ட விசா கட்டணமான 200 அமெரிக்க டொலர்களையும் அபராதமாக 500 அமெரிக்க டொலர்களையும் சேர்த்து குடிவரவுத் திணைக்களத்திற்கு 33,615,000 ரூபாய் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இலங்கை குடிவரவுத் துறை
இந்த நடவடிக்கையின் மூலம் இலங்கை குடிவரவுத் துறைக்கு மொத்தமாக 33.5 மில்லியன் ரூபாய்க்கு இணையான வருமானம் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது இலங்கை வரலாற்றில் விசா விதிமுறையை மீறிய குற்றச்சாட்டில் சிக்கியவர்கள் மூலம் கிடைத்த மிகப்பெரிய வருமானம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களான இந்தியர்கள், ஒன்லைன் சந்தைப்படுத்தல் மற்றும் பந்தய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஒரு சர்வதேச கணினி நிறுவனத்தின் அலுவலகத்திற்காக வேலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பயண விசா
கொழும்பில் உள்ள ஒரு கட்டிடத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.
25 முதல் 54 வயதுக்குட்பட்ட இவர்கள், பயண விசாவைப் பயன்படுத்தி இலங்கையில் ஒரு மாதம் முதல் ஒரு வருடம் வரை தங்கியிருந்ததுடன் உள்ளூர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெலிசர குடிவரவு திணைக்களத்தின் தடுப்பு மையத்தில் இடமில்லாத காரணத்தால், அபராதங்களை செலுத்தியவுடன் அவர்களிடம் இலங்கையை விட்டு உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.





ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri

பிரச்சனையில் இருக்கும் முத்துவை நேரம் பார்த்து பழி வாங்கிய அருண்.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
