இலங்கை நண்பர்களுடன் மொடர்னா தடுப்பூசிகளை பகிர்ந்துகொள்வதில் பெருமிதம்! என்டனி பிளிங்கன்
உலகளாவிய கோவிட் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் 15 லட்சம் மொடர்னா தடுப்பூசி அளவுகளை ‘இலங்கை நண்பர்களுடன்’ பகிர்ந்துகொள்வதில் பெருமிதம் கொள்வதாக அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் என்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
தமது ட்வீட் செய்தி ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்களைக் காப்பாற்றவும், உலகப் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பவும், புதிய வகைகளின் அச்சுறுத்தலைத் தடுக்கவும் முடிந்தவரை பலருக்கு தடுப்பூசி செலுத்த கடமைப்பட்டுள்ளோம் என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
இலங்கைக்கு அமெரிக்க அன்பளிப்பு செய்த 15 லட்சம் மொடர்னா தடுப்பூசிகள் நேற்று அதிகாலை நாட்டை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.