தீயில் எரித்து ஈகைச் சாவடைந்த முருகதாசனின் 13 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு(Photos)
இலங்கை அரசின் தமிழர் மீதான இனப்படுகொலை உச்சம் பெற்றிருந்த வேளையில் சுவிஸ் ஜெனிவா ஐ.நா முன்றலில் தன்னைத் தீயில் எரித்து ஈகைச் சாவடைந்த ”ஈகைப்பேரொளி முருகதாசன்” னின் 13ம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுகள் பிரித்தானியத் தலைநகர் லண்டனில் Holders Hill Rd, London NW7 1NB எனும் முகவரியில் அமைந்துள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் உட்பட்ட 21 தியாகிகளது நினைவுக் கல்லறையில் நேற்று நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் பொதுச்சுடரினை ஈகைப்பேரொளி முருகதாசனின் சகோதரர் வர்ணகுலசிங்கம் சுதன் ஏற்றிவைத்த நிலையில், அவரது தாயாரும் சகோதரியும் ஈகியர் கல்லறைக்கான மலர் மாலையினை அணிவித்து அகவணக்கம் செலுத்தினர்.
இதனை தொடர்ந்து சிறுவர்கள் மற்றும் அங்கு வருகைதந்திருந்த மக்களால் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
ஈகைப்பேரொளி முருதாசன், பேரினவாத அரசின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது “சர்வதேசமே ஈழத்தமிழர்களைக் காப்பாற்று” என உரத்துக் குரல்கொடுத்தவாறு தன்னுடலை தீக்கிரையாக்கினார்.
7 பக்கங்களில் “உலக சமூகத்துக்குத் தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்” என்ற தலைப்பில் ஒரு மரண சாசனத்தை எழுதி வைத்து விட்டு ஜெனீவா மனித உரிமை முன்றலில் 2009 பெப்ரவரி 12ஆம் திகதி அன்று இரவு முருகதாசன் தீக்குளித்து மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.





இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கமலுக்கு முன்பே இயக்குனருக்கு கார் வாங்கி தந்த அஜித் குமார்.. யார் அந்த இயக்குனர் தெரியுமா Cineulagam

மடியில் கட்டுக்கட்டாக கொட்டிய பணம்! லொட்டரி ஜாக்பாட் என சொன்ன நபர்.. இறுதியில் உண்மையை ஒப்புகொண்டார் News Lankasri

நடிகர் சிவாஜிகணேசன் சொத்துக்களை பிரிப்பதில் வாரிசுகளிடையே பிரச்சனை! பிரபு, ராம்குமாருக்கு எதிராக சகோதரிகள் வழக்கு News Lankasri

மனைவியை விட்டுவிட்டு உக்ரைன் அழகியுடன் ஓட்டம் பிடித்த பிரித்தானியர்... நாடுகடத்த விரும்பும் மக்கள் News Lankasri
