வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 11 ஆயிரம் கொவிட் தொற்றாளர்கள்
இலங்கையில் கொவிட் தொற்றாளர்கள் 11 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குடும்ப மருத்துவ நிபுணர்களின் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் தல்காந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட பகுதியில் சுகாதார மருத்துவ அதிகாரி மூலம் குறித்த நோயாளிகள் தரவுத்தளத்தில் பதிவு செய்யப்பட்டு 1390 என்ற தொலைபேசி எண் கொடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் நோயாளிகள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் மருத்துவ மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படும். என அவர் 1390 என்ற இலக்கம் ஊடாக நோயாளிகளிடம் தொலைபேசி ஊடாக உரையாடி சுவாச பிரச்சினைகள் உள்ளதா என்பது தொடர்பில் வினவப்படும்.
அவ்வாறான பிரச்சனைகள் இருந்தால் நுரையீரல் தொற்று ஆரம்பித்துவிட்டதாகக் கருதப்படுகிறது மற்றும் அதை முன்கூட்டியே கண்டறிவது மிகவும் முக்கியம்.
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 11 ஆயிரம் நோயாளிகள் 500 பேர் வரையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





சண்டே ஸ்பெஷல்: இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எது தெரியுமா?.. வெளிவந்த புரொமோ Cineulagam

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
